பத்ம விருதுகள் அறிவிப்பு… தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 131 பேருக்கு விருதுகள்..!

Scroll Down To Discover
Spread the love

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 131 பேருக்குபத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெற உள்ள விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குவார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள். பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஆகிய 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, சமூக சேவைஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான 25-ம் தேதிபத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், 5 பேருக்கு பத்மவிபூஷண், 13 பேருக்கு பத்மபூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 19 பேர் பெண்கள். 6 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 16 பேருக்கு மறைவுக்குபிந்தைய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

5 பேருக்கு பத்ம விபூஷண்:இந்தி நடிகர் தர்மேந்திரா (மறைவு), உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், வயலின் கலைஞர் என்.ராஜம், பி.நாராயணன் (இலக்கியம், கல்வி), கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மறைவு) ஆகிய 5 பேர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

13 பேருக்கு பத்ம பூஷண்: பாடகி அல்கா யக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, நடிகர் மம்முட்டி, டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு, பியூஷ் பாண்டே (மறைவு), எஸ்கேஎம் நிறுவனர் மயிலானந்தன், சதாவதனி ஆர்.கணேஷ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (மறைவு), தொழிலதிபர் உதய் கோட்டக், வி.கே.மல்ஹோத்ரா (மறைவு), வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகிய 13 பேர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

113 பேருக்கு பத்மஸ்ரீ: நடிகர் மாதவன், மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்தி நடிகர் சதிஷ் ஷா (மறைவு), கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, ஹாக்கி வீராங்கனை சவிதா பூனியா, புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேல் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 14 பேருக்கு..தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு பத்ம விபூஷண், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பத்மஸ்ரீ விருதை 2 பேர் பங்கிட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் பத்ம விருதுகளைப் பெறுகின்றனர்.

பத்ம பூஷண்: கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி (மருத்துவம்), எஸ்கேஎம். மயிலானந்தன் (சமூக சேவை).

பத்மஸ்ரீ: கர்னாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் (கலை), முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே (மருத்துவம்), கே.ராமசாமி (அறிவியல், பொறியியல்), முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் (குடிமைப்பணி), ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை), புண்ணியமூர்த்தி நடேசன் (மருத்துவம்), ஆர்.கிருஷ்ணன் (கலை – மறைவு), ராஜாஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), எழுத்தாளர் சிவசங்கரி (இலக்கியம், கல்வி), மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் (கலை), சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி (அறிவியல், பொறியியல்) ஆகியோர் விருது பெறுகின்றனர்.

பத்மபூஷண், பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்:-

தமிழகத்​தைச் சேர்ந்த 14 பேருக்கு பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்​ளிட்ட விருதுகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஈரோடு எஸ்​கேஎம் குழும நிறு​வனங்​களின் நிறு​வனரும், தலை​வரு​மான டாக்​டர் எஸ்கேஎம்​. மயி​லானந்​தனின் சமூக சேவையைப் பாராட்டி மத்​திய அரசு பத்​மபூஷண் விருது அறி​வித்​துள்​ளது. இவர் 2013-ல் பத்மஸ்ரீ விருது பெற்​றவர்.

ஈரோடு மாவட்​டத்​தில் விவ​சாயக் குடும்​பத்​தில் 1945-ல் பிறந்த மயிலானந்​தன் பள்ளி இறுதி வகுப்பு வரை மட்​டுமே கல்வி பயின்றவர். 1983-ல் கோழிப்​பண்​ணை​யாளர்​கள் நலச் சங்​கத்​தைத் தொடங்​கிய இவர், நவீன கிராமப்​புற சந்​தைப்​படுத்​தல் பண்​ட​மாற்று முறையை அறி​முகப்​படுத்​தி, அதில் வெற்றி கண்​ட​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

தஞ்சை மாவட்​டம் திருக்​கரு​காவூரைச் சேர்ந்த சாமி​நாதன்​(81), தரும்​புரம் ஆதீனத்​துக்கு உட்​பட்ட குமரக்​கட்​டளை தேவஸ்தானத்தில் ஓது​வார் பணி​யைத் தொடங்​கி​னார். திருத்​தணி முரு​கன் கோயி​லில் 1974 முதல் 2000 வரை 26 ஆண்​டு​கள் ஓதுவாராகப் பணி​யாற்​றிய இவர், பின்​னர் விருப்ப ஓய்​வு​பெற்று பல்​வேறு கோயில்​களில் ஓது​வா​ராகப் பணிபுரிந்​தார்.

தற்​போது தரு​மபுரம் ஆதீன தேவார பாட​சாலை​யில் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி வெள்ளரிக்​கோம்பை பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆர்​.கிருஷ்ணன். ஆலு குரும்​பர் பழங்​குடி​யின சமூகத்​தைச் சேர்ந்த ஓவியக் கலைஞரான இவர் ‘கிட்​னா’ என்று மக்​களால் அழைக்​கப்​பட்​டார்.

30 ஆண்​டு​களாக பழங்​குடி​யின பாரம்​பரியக் கலையை பிரபலப்​படுத்திய இவர், பழங்​குடி​யினரின் வாழ்​வியலை ஓவி​யங்​களாக வடித்​துள்​ளார். கடந்த ஆண்டு உடல்​நலக்​குறை​வால் உயி​ரிழந்த கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்டுள்​ளது.

சேலம் கன்​னங்​குறிச்​சி​யைச் சேர்ந்த ராஜா ஸ்த​ப​தி, கடந்த 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக கடவுள் சிலைகளை உரு​வாக்கி வரு​கிறார். கடந்த ஆண்டு 13.6 அடி உயர நர்த்தன நடராஜர் சிலையை வடிவ​மைத்​தார். தஞ்சை பெரிய கோயி​லில் உள்ள 14 அடி உயர நாகா பரணத்​தை​யும் இவர் உரு​வாக்​கி ​உள்​ளார். மலேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட நாடு​களி​லும் இவர் சிலைகளை வடிவ​மைத்​துள்​ளார்.

தேசிய விருது உள்​ளிட்ட விருதுகளைப் பெற்​றுள்ள ராஜா ஸ்த​ப​திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

புதுச்​சேரி பூர்​ணாங்​குப்​பம் திர​வுபதி அம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சிலம்​பாட்​டக் கலைஞர் பழனிவேல்​(53), 18 வயதில் தெருக்​கூத்​துக் கலைஞ​ராக கலைத் துறை​யில் நுழைந்​தவர்.

தொடர்ந்​து, சிலம்​பாட்​டம் மற்​றும் காளி​யாட்​டம், மயி​லாட்​டம், ஒயி​லாட்​டம், கரகாட்​டம் உள்​ளிட்ட நாட்​டு​புறக் கலைகளை கற்ற இவர், பிரான்​ஸ், துபாய் உள்​ளிட்ட 10 நாடு​களில் சிலம்​பப் பயிற்சி அளித்​துள்​ளார்.

பல்​வேறு போட்​டிகளி​லும் வென்​றுள்ள இவருக்கு 2012-ல் கலை​மாமணி விருது வழங்​கப்​பட்​டது. தற்​போது இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

திரு​வாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்​வான் பக்​தவத்​சலம் அகில இந்​திய வானொலி​யில் ஏ கிரேடு கலைஞ​ராகப் பணி​யாற்​றிய​வர்.

1992-ல் ஸ்பெ​யினில் நடை​பெற்ற ஒலிம்​பிக் போட்டி தொடக்க விழா​வில் மிருதங்​கம் இசைத்​தார். பல்​வேறு நாடு​களில் இசை நிகழ்ச்​சிகளை நடத்​தி​யுள்ள இவர் ஏற்​கெனவே கலை​மாமணி உள்​ளிட்ட விருதுகளைப் பெற்​றுள்ளார். தற்​போது பக்​தவத்​சலத்​துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தஞ்​சாவூரைச் சேர்ந்த பேராசிரியரும், புகழ்​பெற்ற கால்​நடை மருத்​து​வரு​மான ந.புண்​ணி​யமூர்த்​தி(68), தஞ்சை கால்​நடை மருத்​து​வப் பல்​கலை.​யில் பணி​யாற்​றிய​வர்.

கால்​நடைகளுக்​கான பல்​வேறு நோய்​களுக்​குச் சித்த மருந்து மற்​றும் வீட்டு வைத்​திய முறை​கள் மூலம் சிகிச்சை அளித்​துள்​ளார். மேலும், கால்​நடை உரிமை​யாளர்​களுக்கு இலவச ஆலோ​சனை​களை வழங்​கி, பாரம்​பரிய மருத்​து​வத்​தின் முக்​கி​யத்​து​வத்தை எடுத்​துரைக்​கிறார். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பிரதமர் மோடி வாழ்த்து: பத்ம விருதாளர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. இந்த கவுரவம், வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் மேன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வழங்குவார்: பத்ம விருதுகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பார்.