ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிப்பதாக ஜாட் சமூகத்தினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது சர்ச்சையை எழுப்பி உள்ளது.
காசிப்பூரில் கடந்த 21-ம் தேதி அன்று நடைபெற்ற சமூக அளவிலான பஞ்சாயத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் “ஜனவரி 26 முதல் பின்மால்-கான்பூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் கேமரா வசதி கொண்ட செல்போன்களை திருமணம், பொது நிகழ்வு மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குச் செல்லும்போது கொண்டு செல்லக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...