தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான நான்காவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் இன்று (29.5.2021) மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 2 டேங்கர் லாரிகளில் 31.02 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று காலை 08.15 மணிக்கு மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான நான்காவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் இன்று (29.5.2021) மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. #OxygenExpress #CoronaSecondWave pic.twitter.com/yR4R9UFZdV
— JANANESAN News (@JananesaN_NewS) May 29, 2021
இது தமிழகத்திற்கு வந்த 29 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இதையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 1734.01 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...