ஊனமுற்றவர்களுக்கு உதவிய காவல் துறையினர் .!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் முற்றிலுமாக செயல் இழந்த மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்திற்கு அடுத்தவர்களிடம் கையேந்தும் அவல நிலையில் உள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வு, விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில், இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் இராஜபாளையம் தாலுகா முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களி 17 மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி போன்ற உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கினர்.

செய்தி: Ravi Chandran