இந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்.!

இந்தியா

இந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்.!

இந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்.!

அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் மக்கள் தொகை குறித்து ஆராய்ச்சி நடத்தினர். 2017 உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 183 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மக்கள்தொகை மற்றும் அவற்றின் இறப்பு, கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்களை திட்டமிட புதிய மாதிரிகள் ஆகியவற்றை கொண்டு இந்த புள்ளிவிவரங்களை ஆராய்ச்சி செய்துள்ளனர்.

தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஐ.நா மக்கள் தொகை ஆய்வின்படி, 2064 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 973 கோடியாக உயரும், அதன் பின்னர் அது 2100 இல் 879 கோடியாக சுருங்கிவிடும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கணிப்புகள் ஐ.நா. மக்கள்தொகையை விட சுமார் 200 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டும் 2050 க்கு முன்னர் மக்கள்தொகை உச்சங்களை பதிவு செய்யும், அதைத் தொடர்ந்து அவை கூர்மையான சரிவை ஏற்படுத்தும். 2100 ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள் தொகை அதன் உச்ச மக்கள்தொகையில் 51.1 சதவீதமாக ஆக இருக்கும், மேலும் இந்தியாவின் மக்கள் தொகை 68.1 சதவீதமாக இருக்கும் என்று பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும். அதேவேளையில் 2100-ல் 32 சதவீதம் குறைந்து 109 கோடியாகும். 2017-ல் இந்தியாவில் வேலைக்கு தகுதியான வயதுடைய நபர்கள் 76.2 கோடியாக இருந்த நிலையில், 2100-ல் அது 57.8 கோடியாக குறையும். சீனாவில் 2017-ல் 95 கோடியாக இருந்த நிலையில், 2100-ல் 35.7 கோடியாக குறையும் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...