கீழடியில் ரூ.12.25 கோடியில் அகழ்வைப்பகம் : காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஊராட்சியில் தற்போது, 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் நடந்து முடிந்த அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள், எலும்புக்கூடுகள், செங்கல் சுவர் உள்ளிட்டவைகளை உலகறிய செய்யயும் வகையில் அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்23 ஆம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளன.

இதனையடுத்து அங்கு 12.கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் அகழ்வைப்பகம் நிறுவப்படவுள்ளது. இந்த நிலையில், கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.