ராணுவத்தில் பணிபுரிபவர்கள், ‘பேஸ்புக், பயன்படுத்த தடை விதிக்க கூடாது – ராணுவ அதிகாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!

இந்தியா

ராணுவத்தில் பணிபுரிபவர்கள், ‘பேஸ்புக், பயன்படுத்த தடை விதிக்க கூடாது – ராணுவ அதிகாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!

ராணுவத்தில் பணிபுரிபவர்கள், ‘பேஸ்புக், பயன்படுத்த தடை விதிக்க கூடாது  – ராணுவ அதிகாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி, திடீரென லடாக் சென்று ஆய்வு செய்தார்.இந்நிலையில் 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், ஜூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவத்தினர், மற்றும் ஆயுதப்படையினர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் ஜூலை 15ம் தேதியிலிருந்து நீக்கிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஜம்மு — காஷ்மீரில் பணியாற்றும், லெப்டினன்ட் கர்னல், பி.கே.சவுத்ரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.அதன் விபரம்:குடும்பத்தை பிரிந்து, பல்லாயிரம் கி.மீ., துாரத்தில், தனிமையில், ஆபத்து நிறைந்த பணியை மேற்கொள்ளும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தகவல் பரிமாறி கொள்ள, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பெரும் உதவியாக உள்ளன.அதற்கு தடை விதிப்பது, வீரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். எனவே, இந்த உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு கேவியட் மனு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன மொபைல் செயலி நிறுவனங்கள், அந்த தடையை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவ்வாறு மனுதாக்கல் செய்தால், அரசு தரப்பு விளக்கத்தை கேட்காமல், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு தரப்பில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கான காரணம் கூறப்படவில்லை.

Leave your comments here...