இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு உள்ள மத சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது – வேலூர் இப்ராஹிம்…!!

தமிழகம்

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு உள்ள மத சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது – வேலூர் இப்ராஹிம்…!!

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு உள்ள மத சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது – வேலூர் இப்ராஹிம்…!!

திருப்பூர் அருகே மங்கலத்தில், ‘இந்து மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் நடந்த, குடியுரிமைச் சட்ட விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்து முன்னணி தலைவர்கள் உட்பட பல்வேறு இந்து அமைப்பு தலைவர்கள் குடியுரிமை சட்டம் குறித்து பேசினார்கள்.

இதில் தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசுகையில்:- இதில் கலந்து கொண்ட நான் திருப்பூர் வரும் முன் கொலை மிரட்டல் வந்தது; எனது வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடந்தது. தேச ஒற்றுமைக்காக வாழ்வது தான், உண்மையான மத நல்லிணக்கம். குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவில் இருக்க கூடிய, இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இஸ்லாம் மக்களை நேசிக்க கூடிய இந்து சகோதரர்கள் எல்லாம், உங்களை வெறுக்கும் நிலையில் உங்கள் போராட்டம் உள்ளது.


குடியுரிமை சட்டத்தால் பாதிப்பு இருக்கிறது என்று யாராவது நிரூபித்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன்.சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று, கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்த முதல் நபர் நான்.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு உள்ள மத சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இங்கு இஸ்லாமியர் வாழ்வது, ஒரு தவம். இந்துக்களோடு சேர்ந்து, நான் போராடி கொண்டு இருக்கிறேன். இஸ்லாமிய சகோதரர்களே சிந்திக்க வேண்டும். சில தலைவர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். உங்களை நினைக்கையில் கண்ணீர் வருகிறது. நான் உயிர் இழந்தாலும் பரவாயில்லை; குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுவேன் என கூறினார்.

Leave your comments here...