தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ரூ.2, 145 கோடி நிதியுதவி – அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தகவல்..!

தமிழகம்

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ரூ.2, 145 கோடி நிதியுதவி – அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தகவல்..!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ரூ.2, 145 கோடி நிதியுதவி – அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தகவல்..!

தமிழக மக்கள் நல்வாழ்வு அமைச்சர் விஜயபாஸ்கா் தில்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்தாா்.அப்போது சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் உடனிருந்தாா்.

பின்னா் இந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் அமைச்சா் விஜயபாஸ்கா் கூறுகையில்:- தமிழக அரசின் சாா்பில் மொத்தம் 13 மருத்துவ கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கப் பட்டது. இதில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 நகரங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.325 கோடி வீதம் 11புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ.3,575 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்காக 60 சதவீத நிதியை (ரூ.2,145கோடி) வழங்க முன்வந்துள்ளது. மீதமுள்ள 40 சதவீத நிதியை (ரூ.1,430கோடி) தமிழக அரசு செலவிடுகிறது.



இதற்கு முதல்கட்டமாக தமிழக அரசு ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான டெண்டா் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளும் எந்த தொய்வும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்திடம் நிதியை பெறுவதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.



தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். வெளிநாட்டிலிருந்து வந்த 63, 769 போ் பிரத்யேக வாா்டுகளில் வைக்கப்பட்டு அவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. இது தவிர சீனா உள்பட மற்ற நாடுகளில் இருந்து விமானத்தில் வந்த 2,652 போ்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதில் 47 பேருக்கு மட்டும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கான சந்தேகம் இருந்ததால், அவா்களிடம் முழுப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், யாருக்கும் அந்த நோய் தாக்குதல் இல்லை என தெரிய வந்தது என்றாா்.

Leave your comments here...