வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார் தி.மு.க. தலைவர் – சசிகலா

அரசியல்

வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார் தி.மு.க. தலைவர் – சசிகலா

வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார் தி.மு.க. தலைவர் –  சசிகலா

தி.மு.க. தலைவர் வாய் கூசாமல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யை சொல்லி மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார் என சசிகலா கூறியள்ளார்.

அதிமுக-வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை சசிகலா வழங்கினார்.

பின்னர் பேசிய சசிகலா:- தமிழக மக்களை காப்பாற்ற எம்.ஜி.ஆர். 51 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா உருவம் பதித்த கொடியை தாங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.எம்.ஜி.ஆர். திரைப்படத்துறையில் இருந்து வந்ததால் மட்டுமே தலைவரானார் என்று நினைப்பது தவறு. அதே போன்று ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து வந்தவர் என்றாலும், பல காலம் கட்சிப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடி, அவர்களுக்கு உறுதுணையாக நின்றதால் புரட்சித் தலைவி ஆனார். மேலும், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுதாயத்தில் பல்வேறு சோதனைகளை சந்தித்து அதில் வெற்றியும் கண்டு தமிழக முதல்வராக அரியணையில் அமர்ந்தார்.

தமிழக மக்களின் பேராதரவோடு ஆறுமுறை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா எண்ணிலடங்கா மக்கள்நலத் திட்டங்களை கொடுத்து தமிழக மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தார். தனது இறுதி மூச்சு உள்ளவரை மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தமிழக மக்களின் நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

இதுபோன்று எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம், புரட்சித்தலைவி அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு எதிர்க்கட்சியினர் எள்ளி நகையாடும் நிலையில் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.கடவுள் மீதும், உங்கள் திறமையின் மீதும் முழு நம்பிக்கை சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து வைத்தால் எதிரிகளின் வெற்றியை அடையமுடியும்.தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களுக்கு என்றைக்கும் அழிவே கிடையாது.

தி.மு.க. தலைவர் வாய் கூசாமல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யை சொல்லி மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார்.தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க. தலைமையிலான அரசைக் கண்டித்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாள்தோறும் போராட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

தி.மு.க.வினருக்கு தமிழக மக்களின் நலனைப் பற்றிய எந்தவித கவலையும் இல்லை. மாறாக தி.மு.க.வினருக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை வரும் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, எதிர்கட்சியினர் யாரும் ஒன்றிணைந்து விடக்கூடாது. அதை எந்தெந்த வழிகளில் தடுக்கலாம் என்ற சிந்தனையிலேயே இருப்பதாகத்தான் தெரிய வருகிறது.ஆனால் ஒன்றை மட்டும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும். அதற்காக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறேன்.

ஜெயலலிதா சூளுரைத்தது போல் இந்த இயக்கம் இன்னும் நூற்றாண்டுகளை கடந்தும் தமிழக மக்களுக்காகவே இயங்கும் என்பதை இந்நன்னாளில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் பயணித்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றுங்கள்.தமிழக மக்களின் வாழ்வு மலர, நம் இருபெரும் தலைவர்கள் காட்டிய அதே வழியில் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை அமைத்து காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave your comments here...