பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..!

இந்தியாஉலகம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..!

தென் ஆப்பிரிக்கா குடியரசுத் தலைவர் எச்.இ. மட்டமேலா சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில் வரும் ஆகஸ்ட் 22- 24ம் தேதிகளில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இது 2019ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் நபர் பிரிக்ஸ் உச்சி மாநாடாகும். தென் ஆப்பிரிக்காவால் அழைக்கப்பட்ட பிற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்” என்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி தனது பயணத்தின்போது, ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். தென் ஆப்பிரிக்காவின் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி வரும் 25ம் தேதி அன்று கிரீஸ் நாடுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 40 ஆண்டுகளில் அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

Leave your comments here...