ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி..!

அரசியல்தமிழகம்

ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி..!

ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி பாராளுமன்றத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த மனுவில், “ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகம் செய்தல், வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்தல், வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்தல், வங்கிகளில் பெற்ற 10 கோடி ரூபாய் கடனை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, இது குறித்த புகாரை தேர்தல் அதிகாரிகள் வாங்க மறுத்தல், வாக்கு பெட்டியை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன” என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வழங்கிய தீர்ப்பில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டு இருந்தார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவிந்திரநாத் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமந்த்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Leave your comments here...