நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தெலங்கானா தலைமை செயலகத்தை இடிப்போம் – பாஜக மாநில தலைவர்…?

அரசியல்

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தெலங்கானா தலைமை செயலகத்தை இடிப்போம் – பாஜக மாநில தலைவர்…?

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தெலங்கானா தலைமை செயலகத்தை இடிப்போம் – பாஜக மாநில தலைவர்…?

தெலுங்கானா மாநிலத்தில் 1 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமை செயலகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் வரும் 17-ம் தேதி திறந்துவைக்கிறார். இதனிடையே, புதிய தலைமை செயலக கட்டிடத்தின் வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய கட்டிட கலையை வெளிப்படுத்தும் வகையில் புதிய தலைமை செயலகத்தின் மேல்தளத்தில் குவிமாடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதேவேளை, ஐதராபாத் எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி புதிய தலைமை செயலக கட்டிடம் தாஜ்மஹால் போன்று உள்ளதாக பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய தலைமை செயலக குவிமாவடங்களை இடிப்போம் என்று தெலுங்கானா பாஜக மாநில தலைவர் பிண்டி சஞ்சய் குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 1 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் முதல்-மந்திரி தலைமை செயலகத்தை தாஜ்மஹால் போல் கட்டியுள்ளார். தெலுங்கானாவில் பாஜக ஆட்சியமைத்த உடன் தலைமை செயலகத்தின் குவிமாடங்கள் நிச்சயம் இடிக்கப்படும். தெலுங்கானா மற்றும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தலைமை செயலகத்தை மாற்றியமைப்போம் என்றார். தலைமை செயலகம் தாஜ்மஹால் போல் உள்ளது என்று அசாதுதீன் ஓவைசி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள சஞ்சய் குமார், சந்திரசேகர ராவ் ஓவைசியை திருப்திபடுத்த முயற்சிக்கிறார். உண்மையில் தாஜ்மஹால் ஒரு சமாதி’ என்று அவர் கூறினார்.

Leave your comments here...