ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரின் வீட்டிலிருந்து வெண்கலச் சிலைகள் மீட்பு – சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி..!

தமிழகம்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரின் வீட்டிலிருந்து வெண்கலச் சிலைகள் மீட்பு – சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி..!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரின் வீட்டிலிருந்து வெண்கலச் சிலைகள் மீட்பு – சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு  போலீசார் அதிரடி..!

புதுச்சேரி: ஆரோவில் உள்ள ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் இல்லத்திலிருந்து சோழர்காலத்தை சேர்ந்த பழங்காலத்து வெண்கலச் சிலைகலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகள் குறித்து தகவல் பெற்று அதை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் இரும்பு கொட்டக்கரை அதாவது ஆரோவில் உள்ள ஜெர்மன் தம்பதியினர் வீட்டில் ஒரு ரகசிய அறையில் முன்று பழங்கால சிலைகளை சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அந்த ஜெர்மன் தம்பதியினர் இருக்கும் வீட்டிற்கு சென்று சோதனை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

குறிப்பாக இவருக்கு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று அங்கு சோதனை நடத்தபட்ட போது ஜெர்மன் தம்பதியினர் முதற்கட்டமாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீட்டை சோதனையிட கூடாது என்று பலமுறை அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை காட்டி உள்ளே சென்று பார்க்கும் போது வெளிநாட்டில் கட்டப்பட்டது போன்று இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல்கட்டமாக தேடும் பொழுது சிலைகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு தொடர்ந்த கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பார்க்கும் பொழுது வெளி நாட்டில் கட்டப்பட்டது போன்று ஒரு ரகசிய அறை ஒன்று கட்டப்பட்டு முதல்மாடியில் அந்த சிலைகளை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

அங்கு சென்று பார்க்கும் பொழுது மூன்று சிலைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் 3 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. நடராஜர், அம்மன், சந்திரசேகரர் ஆகிய சிலைகள் கைப்பற்றப்பட்டது. இந்த மூன்று சிலைகளுமே பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஜெர்மன் தம்பதிகள் கட்டிட கலை நிபுணர் என்ற காரணத்தினாலும் இது போன்ற பழங்கால சிலைகளை வைத்து ஒரு அருங்காட்சியகம் அமைப்பதற்கு திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இந்த சிலைகளின் தொடர்பான எந்த ஆதாரங்களும் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவற்றை பறிமுதல் செய்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சமர்பித்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்களிடம் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வருகின்றனர்.

Leave your comments here...