சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து… ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்..!

தமிழகம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து… ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில்  வெடிவிபத்து… ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேலஒட்டம்பட்டி பகுதியில், சிவகாசி பகுதியைச் சேர்ந்த பிரம்மன் என்பவருக்கு சொந்தமான விநாயகா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

மத்திய வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50 அறைகளில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை பணிகள் முடிந்து தொழிலாளர்கள் ஆலையை விட்டு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பேன்சி ரக வெடிக்கு மருந்து செலுத்தம் அறையில், சாத்தூர் அருகேயுள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (20), ராமர் (19) இருவரும் பட்டாசுகளில் மருந்து செலுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு மூலப் பொருட்களில் உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த அறை முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. விபத்தில் சிக்கிய கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...