பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்டின் 25 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது..!

இந்தியா

பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்டின் 25 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது..!

பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்டின் 25 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5:59 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில், 1,710 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-04 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள், ஒரு மாணவரின் செயற்கைகோள் உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்டின் இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் 25 மணிநேரம் 30 நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கவுண்ட்டவுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.29 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.59 மணிக்கு ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...