12ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் – இஸ்ரோ தகவல்

இந்தியா

12ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் – இஸ்ரோ தகவல்

12ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் – இஸ்ரோ  தகவல்

ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இம்மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமை பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால், திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 202 பிப்ரவரி 28-ஆம் தேதி ‘பி.எஸ்.எல்.வி. சி-51’ ராக்கெட் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் பொருத்தப்பட்டிருந்த பிரேசிலை சேர்ந்த ‘அமேசோனியா’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் அதனுடன் 18 செயற்கைகோள்கள் விண்ணில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆண்டின் 2ஆவது ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- “இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ‘ஈ.ஓ.எஸ்.-03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த செயற்கைகோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14-வது ராக்கெட்டாகும்.

விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைகோளாகும். இது பூமியின் மேல்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைகோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத்தகடு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட் டவுன்’ அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.” இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Leave your comments here...