சென்னை விமான நிலையத்தில் 18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் 18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம்  பறிமுதல்.!

சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ரூபாய் 18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்தனர்.

விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுப் பிரிவின் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் ஏ ஐ 906 சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது, விமானத்தின் பின்புற கழிவறையில் பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தபோது, அதற்குள் தங்க சங்கிலி உட்பட 408 கிராம் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டு சுங்க சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 18.90 லட்சம் ஆகும்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைப்பெற்று வருவதாக செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...