கோலாகலமாக நடைபெற்ற பிரசித்திபெற்ற திருவாதவூர் துரௌபதி அம்மன் திருக்கல்யாணம்.!

ஆன்மிகம்

கோலாகலமாக நடைபெற்ற பிரசித்திபெற்ற திருவாதவூர் துரௌபதி அம்மன் திருக்கல்யாணம்.!

கோலாகலமாக நடைபெற்ற பிரசித்திபெற்ற திருவாதவூர் துரௌபதி அம்மன் திருக்கல்யாணம்.!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கிராமத்து கோவிலான துரௌபதி அம்மன் திருக்கோவில்.

இத்திருக்கோவிலில் மிகவும் பழமையான சக்தி வாய்ந்த நினைத்ததை முடித்து தரக்கூடிய சிறப்பு வாய்ந்த கோவிலாகும்.
இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும்பூக்குழி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அதன்படிஇந்த ஆண்டு துரோபதி அம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான துரெளபதி அம்மன் அர்ஜுனன் திருக்கல்யாண வைபவம் விமரிசையாகவும் கோலாகலமாகவும் வான வேடிக்கையுடன் நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் திருவாதவூர் கட்டையம்பட்டி வெள்ளாளப்பட்டி மேலூர் பூஞ்சுத்திபுலி பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிறப்பு வாய்ந்த முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave your comments here...