எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 13 ஆயிரம் வீரர்களை சேர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.!

இந்தியா

எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 13 ஆயிரம் வீரர்களை சேர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.!

எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 13 ஆயிரம் வீரர்களை சேர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.!

நேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், எஸ்.எஸ்.பி., எனப்படும் சாஸ்த்ரா சீமா பல் படைப் பிரிவில், 13 ஆயிரம் வீரர்களைக் கொண்ட, 12 பட்டாலியன்களை புதிதாக உருவாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நேபாளம், பூடான் எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை, எஸ்.எஸ்.பி., எனப்படும் ஆயுதம் தாங்கிய எல்லை பாதுகாப்பு படைப் பிரிவு கவனித்து வருகிறது. இந்தப் படையில், 90 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
நேபாளத்துடனான, 1,751 கி.மீ., நீள எல்லை; பூடானுடனான, 699 கி.மீ., தூர எல்லையில், பாதுகாப்பு பணிகளை இந்தப் படைப் பிரிவு கவனித்து வருகிறது. மேலும், சிக்கிம் மாநிலத்தில், பூடான் மற்றும் திபெத் உடனான எல்லைப் பகுதியையும், இந்தப் படைப் பிரிவு கண்காணித்து வருகிறது.

இந்தப் படைப் பிரிவின் தேவைகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2019ல் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ’12 பட்டாலியன்கள்; ‘பிரான்டியர்’ எனப்படும், ஒரு படைப் பிரிவு தலைமைகம்; ‘செக்டார்’ எனப்படும், மூன்று துணை படைப் பிரிவு தலைமையகங்கள் அமைக்க வேண்டும்’ என, எஸ்.எஸ்.பி., அறிக்கை அளித்திருந்தது. ஒரு பட்டாலியின் என்பது, ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் கொண்டது. செக்டார் என்பது, 56 பட்டாலியன்கள் கொண்டது. அதேபோல், 24 செக்டார் அடங்கியது, ஒரு பிரான்டியர்.

இந்த நிலையில், 13 ஆயிரம் வீரர்கள் கொண்ட, 12 பட்டாலியன்களை உருவாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், டில்லியை தலைமையிடமாக வைத்து, ஒரு செக்டார் உருவாக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள செக்டார்கள் மற்றும் பிரான்டியருக்கான அனுமதி பின்னர் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...