ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் விருதுக்கு இந்திய தொழிலதிபர் தேர்வு

இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் விருதுக்கு இந்திய தொழிலதிபர் தேர்வு

ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் விருதுக்கு இந்திய தொழிலதிபர் தேர்வு

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து ஐ.நா. சபை செயல்பட்டு வருகிறது.ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக சிறந்த ஆலோசனைகளை வழங்கி அதை செயல்படுத்தும் இளம் தொழிலதிபர்களுக்கு ‘புவியின் இளம் சாதனையாளர்கள்’ என்ற விருதை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு விருதுக்கு இந்திய இளம் தொழிலதிபர் வித்யுத் மோகன் உட்பட ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பஞ்சாப் மற்றம் ஹரியானாவில் விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஆண்டுதோறும் டில்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஜினியரான வித்யுத் மோகன் ‘டகாசார்’ என்ற நிறுவனத்தை 2018ல் கெவின் குங் என்பவருடன் இணைந்து துவக்கினார்.

விவசாய கழிவுகளை விவசாயிகள் எரிப்பதை தடுப்பதுடன் அதை வருமானமாக்கும் வழிகளை விவசாயிகளுக்கு இந்நிறுவனம் கற்று தருகிறது. விவசாயிகளிடமிருந்து வைக்கோல் உமி தேங்காய் ஓடுகள் ஆகியவற்றை டகாசார் நிறுவனம் வாங்கி கரி தயாரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. காற்று மாசும் குறைகிறது. வித்யுத் மோகனின் இந்தப் பணியை பாராட்டி புவியின் இளம் சாதனையாளர்கள் விருதுக்கு அவரை ஐ.நா. தேர்வு செய்துள்ளது.

Leave your comments here...