டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : 100க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்.!

சமூக நலன்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : 100க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்.!

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : 100க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்.!

இராஜபாளையம் அருகே புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திரா நகர் லீலாவதி நகர் பகுதியில் புதிதாக டாஸ்மார்க் கடை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் எனக் கூறி டாஸ்மாக் கடைக்கு தயார் செய்யப்படும் கட்டிடத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் இந்த டாஸ்மாக் கடை இந்த பகுதியில் வருவதால் இந்த பகுதியில் வாழக்கூடிய பெண்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்காது அருகிலேயே பெருமாள் கோவில் உள்ளது பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பாதையை கடந்து தான் செல்ல வேண்டும் ஆகையால் இந்த கடை இந்த பகுதியில் தேவையில்லை எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையும் மீறி இந்த கடை இங்கு திறக்கப்பட்டால் தீவிரமான போராட்டம் நடைபெறும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்குவோம் என அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் தெரிவித்தனர்

Leave your comments here...