கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது.!

தமிழகம்

கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது.!

கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது.!

மதுரை ஆரப்பாளையம் அம்மா பாலம் ரவுண்டானா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சந்தேகம் அளிக்கும் வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது அதில் சோதனை செய்தபோது, அந்த காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அதை கொண்டு வந்த 5 பேரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் ,மதுரையை சேர்ந்த ரவி, தினேஷ் குமார், பிரவீன் குமார். தேனியை சேர்ந்த பெரிய கருப்பன், கண்ணன் காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 5 பேர் கைது செய்த சுமார் 35 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கரிமேடு போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave your comments here...