இராஜபாளையத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்..!

அரசியல்

இராஜபாளையத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்..!

இராஜபாளையத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும்  பணிகளை  அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்..!

இராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ,ரயில்வே மேம்பால பணிகள் என பல்வேறு பணிகள் இந்த பகுதியில் நடந்து வருவதால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மேடுகளாக இருப்பதால் விபத்துக்கள் அதிகரித்து வந்த நிலையில் இன்று பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை போட்டு புதிய சாலை அமைக்கும் பணிகளை துவங்கி வைத்தார் உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா , நகர செயலாளர் பாஸ்கர், நகர அம்மா பேரவை வாக்கில் முருகேசன் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றார்

அதன்பின் செய்தியாளர்களை சந்திப்பின் போது,விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் ரயில்வே மேம்பால திட்டம், பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல பணிகள் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மக்கள் நலன் கருதி அதிமுக அரசினால் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

எதிர்காலத்தில் மக்கள் குடிநீர் பிரச்சினை தீரும், சுகாதாரமான வாறுகால் வசதி கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் தோண்டப்பட்ட சாலைகள் புதிதாக அமைக்க தற்போது 24 கோடி ரூபாய் செலவில் முக்கிய சாலைகள் பணி துவங்கி உள்ளது. மேலும் பல பகுதிகளில் சாலை பணிகளை விரைவில் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அதிமுக அரசு துவங்க உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். திமுகவில் ஆ.ராசா தொண்டர்களை தரக்குறைவாக பொதுவெளியில் நாயே என திட்டியது குறித்து நிருபர்கள் கேட்டபோது, இது திமுகவின் கலாச்சாரமாக தொடர்கிறது . ராஜா வாழ்க என கத்தியதிற்க்கு தரகுறைவாக வசைபாடியதால் அவரின் மனநிலை என்னவோ?என விமர்சித்தார்.

Leave your comments here...