உபி.,யில் ரூ.1800 கோடி செலவில் உருவாகும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு ‘வாரன்ட்’ இல்லா கைது அதிகாரம்.!

இந்தியா

உபி.,யில் ரூ.1800 கோடி செலவில் உருவாகும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு ‘வாரன்ட்’ இல்லா கைது அதிகாரம்.!

உபி.,யில் ரூ.1800 கோடி செலவில் உருவாகும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு ‘வாரன்ட்’ இல்லா கைது அதிகாரம்.!

உ.பி.,யில் உருவாகும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு, ‘வாரன்ட்’ இல்லாமல் சோதனை, மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அதிகாரம் வழங்கப்படுகிறது.

உயர்நீதிமன்றம் மாவட்டநீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள், வங்கிகள் மெட்ரோ ரயில் நிலையங்கள் நிர்வாக கட்டடங்கள் மற்றும் மாநிலத்தால் முக்கியமானவையாக கருதப்படும் பல்வேறு நிறுவனங்களின் பாதுகாப்பு பணியை சிறப்பு படை கவனிக்கும்.மகாராஷ்டிரா மற்றம் ஒடிசா மாநிலங்களில் செயல்பட்டு வரும் புரோவின்சியல் ஆர்ம்டு கான்ஸ்டாபுலரி (பிஏசி) போன்று உ.பி.,யிலும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தின் காவல்துறை மீதான அழுத்தத்தை குறைப்பதோடு மாநிலத்தில் கூடுதல் வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.இதற்காக ரூ.1,800 கோடி ஒதுக்கப்படுகிறது. முதற்கட்டமாக ஐந்து பட்டாலியன் படைகளை உருவாக்கப்படும். நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஓதுக்கப்படாததால் துணை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். 2021-2022 ம் நிதியாண்டில் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், அவனிஷ் குமார் அவஸ்தி கூறியதாவது: மாநிலத்தில், அனைத்து நீதிமன்றங்களின் பாதுகாப்பை பலப்படுத்த, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரூ.1,800 கோடி ரூபாய் செலவில், எஸ்.எஸ்.எப்., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது.

இதற்கான மசோதா, சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இப்பிரிவிற்கு, வாரன்ட் இல்லாமல் சோதனை மற்றும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படும். இப்பிரிவை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 1,913 பேருடன், ஐந்து ‘பட்டாலியன்’களாக அமைக்கப்படும் சிறப்பு படை, பின், 9,919 பேருடன் விரிவுபடுத்தப்படும்.இப்பிரிவினர், போலீஸ் டி.ஜி.பி., கண்காணிப்பின் கீழ், ஏ.டி.ஜி.பி., தலைமையில் செயல்படுவர்.மாநிலத்தில், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள், மத வழிபாட்டு தலங்கள், மெட்ரோ ரயில் மற்றும் விமான நிலையங்கள், வங்கிகள், அரசின் தொழில் நிறுவனங்களில், சிறப்பு பிரிவினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...