மன் கி பாத் நிகழ்ச்சி – புதிய கல்வி கொள்கை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது பிரதமர் மோடி உரை.!

இந்தியா

மன் கி பாத் நிகழ்ச்சி – புதிய கல்வி கொள்கை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது பிரதமர் மோடி உரை.!

மன் கி பாத் நிகழ்ச்சி – புதிய கல்வி கொள்கை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது  பிரதமர் மோடி உரை.!

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:
உலக அளவிலான விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில், ஏழு இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான பெறுமானமுடையது. இந்த 7 இலட்சம் கோடி ரூபாய் என்ற இத்தனை பெரிய வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவானது:விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் மிகவும் பரந்து பட்டது. குடிசைத் தொழிலோ, குறு-சிறு தொழிலோ, MSMEக்களோ, கூடவே பெரிய தொழில்களோ, தொழில் முனைவோரோ அனைவரும் இதன் வட்டத்திற்குள் வருகிறார்கள். இதை முன்னெடுத்துச் செல்ல நாட்டில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இப்போது அனைவரும் உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது. வாருங்கள், நாம் நமது சிறார்களுக்காக, புதியதொரு வகையிலான, நல்ல தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்போம். இந்த மாத தொடக்கத்தில் இளைஞர்கள் முன்னிலையில் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவால் ஒன்று வைக்கப்பட்டது. இந்த தற்சார்பு பாரதச் செயலிகளில் புதுமைகள் படைத்தல் சவாலில் நமது இளைஞர்கள் மிகவும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். இதற்கு 7000 பேர் பதிவு செய்தனர்.மூன்றில் இரண்டு பங்கு செயலிகள் இரண்டாம் அடுக்கு-மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கி இருந்தார்கள். ஆய்வுக்குப் பிறகு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, சுமார் 24 செயலிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில் மிகவும் பரந்து பட்டது. குடிசைத் தொழிலோ, குறு-சிறு தொழிலோ, #MSME க்களோ, கூடவே பெரிய தொழில்களோ, தொழில் முனைவோரோ அனைவரும் இதன் வட்டத்திற்குள் வருகிறார்கள்.நீங்கள் அவசியமாக இந்த செயலிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இப்படிப்பட்ட ஒன்றை ஏற்படுத்த உங்களுக்கும் உத்வேகம் பிறக்கலாம்.இன்று உலகிலே மிகப்பெரிய நிறுவனங்களாக வலம் வருபவை அனைத்தும் ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப் -கள் என்ற நிலையிலிருந்தே தங்கள் பயணத்தைத் தொடங்கின.

நாடு முழுவதிலும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும்:சிசு கர்ப்பத்தில் இருக்கும் போதும், அதன் குழந்தை பருவத்திலும், எத்தனை சிறப்பாக ஊட்டச்சத்து அதற்குக் கிடைக்கிறதோ, அத்தனை சிறப்பாக அதன் மனவளர்ச்சி ஏற்படும், ஆரோக்கியமாக இருக்கும். ஊட்டச்சத்துக்கான இந்த இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது. ஊட்டச்சத்து மாதத்தில் @mygovindia தளத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய வினா விடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. இதோடு கூடவே ஒரு மீம் போட்டியும் நடைபெறும். நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.

கொரோனா பீடித்திருக்கும் சங்கடமான வேளையில், படிப்பில் தொழில்நுட்பத்தை எத்தனை அதிக அளவு பயன்படுத்தலாம், புதிய வழிமுறைகளை எப்படிக் கையாளலாம், மாணவர்களுக்கு எப்படி உதவிகரமாக செய்யலாம், என்பதை மிக இயல்பான, எளிமையான வகையிலே நமது ஆசிரியப் பெருமக்கள் கையாண்டார்கள். நாட்டில் புதிய கல்விக் கொள்கை வாயிலாக நிகழவிருக்கும் ஒரு பெரிய மாற்றத்தின் ஆதாயங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நமது ஆசிரியர்கள் பெரும்பங்கு வகிப்பார்கள்:

இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது. பண்டிகை காலத்தில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும. கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது . இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...