செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது : தங்க நகைகள் மீட்பு – குமரி போலீசார் நடவடிக்கை.!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம்,மார்த்தாண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடை நடத்தி வந்த காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்த மெல்பா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 4.5 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் கடையில் பொருள் வாங்குவது போல் வந்து தங்கச்சங்களியை பறித்து சென்றதாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்கு செய்யப்பட்ருந்தது.

மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் அவர்கள் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மேல்பாலை பகுதியை சேர்ந்த சிபின் (26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுஜித் (23) என்பவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகையை மீட்டனர். காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் வேல் குமார் அவர்கள் குற்றவாளிகளை நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

: Tharnesh -H