இலக்குகளை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி..!

Scroll Down To Discover
Spread the love

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு அக்னி-5 ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை , கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கி.மீ. தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (அக்.27) ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.