மலையடிவாரத்தில் இறந்து கிடந்த கரடி : வனத்துறை அதிகாரிகள் பரிசோதனை

Scroll Down To Discover
Spread the love

உசிலம்பட்டி அருகே மலை அடிவாரத்தில் இறந்து கிடந்த கரடி வனத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டி பட்டி மலை அடிவாரத்தில் கரடி இறந்து கிடப்பதாக உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த கரடியை, பரிசோதனை செய்து பார்த்ததில் பசியில் இறந்ததா, இல்லையெனும் யாராவது கொல்லப்பட்டு இருந்ததா என ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என தெரிவித்தனர். மேலும், கரடியே பிரேத பரிசோதனை செய்து அருகில் உள்ள மலை அடிவாரத்தில் அடக்கம் செய்தனர்.

செய்தி : ரவிசந்திரன்