சோழவந்தான் பேரூராட்சி சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் கொரோனோ தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கரிசல் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், துப்புரவு ஆய்வாளர் குருசங்கர் வரவேற்றார்.இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் அசோக்குமார் சதீஷ்குமார் சோணமுத்து பாண்டி சந்தோஷ் செல்வம் பூவலிங்கம் மேற்பார்வையாளர்கள் சுந்தரராஜன் பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.