லாரியில் சமையல் செய்து போது தீ விபத்து : லாரி முற்றிலும் எரிந்தது நாசம்.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கண்டைநேர் லாரி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் லோடு இறக்கிவிட்டு இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே நிறுத்தி ஓட்டுனர் மற்றும் கிளீனர் சமையல் செய்தனர்.

திடீரென சிறிய கேஸ் சிலிண்டர் வெடித்ததில் லாரியில் உட்பகுதியில் இருந்த தார்ப்பாய் மற்றும் கழிவு பஞ்சுகளில் தீப்பிடித்ததில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது இந்த தகவல் அறிந்து இராஜபாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ விபத்தால் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.