பச்சரிசி – கோதுமை சரிவர ரேசன் கடைகளில் கிடைப்பதில்லை எனக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டத்தில் உள்ள ரேசன் அடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 ம் தேதி வரை மட்டுமே, பச்சரிசி, கோதுமை வழங்கப்படுவதை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைக்க வேண்டும், பாமாயில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுவதை மாதந்தோறும் வழங்க வேண்டும், 500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை, வழங்கப்படுகின்ற பொருட்களின் எடை குறைவை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நிர்வாகி ராஜேஸ்வரி தலைமையில் செயலர் சசிகலா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.