வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் வீணாக விடமாட்டோம் ; தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் – இந்திய விமானப்படை தளபதி பதாரியா

இந்தியா

வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் வீணாக விடமாட்டோம் ; தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் – இந்திய விமானப்படை தளபதி பதாரியா

வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் வீணாக விடமாட்டோம் ; தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார்  – இந்திய விமானப்படை தளபதி பதாரியா

அமைதியைக் காக்க நாடு எப்போதும் பாடுபடும், கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் செய்த “தியாகம்” வீணாகாது என இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார்.

ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கலந்து கொண்டார்

பின்னர் பேசிய அவர் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் மேலும் தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.


நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும், உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும், எல்லை பிரச்சினை தற்போதைய நிலைமையில் அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என தெரிவித்தர்.

Leave your comments here...