மால்கள் ஹோட்டல்கள், வழிபாட்டு தலங்கள் 8ம் தேதி திறப்பு ; வழிகாட்டுதல் நெறி முறைகளை வெளியிட்டது மத்திய அரசு.!

இந்தியா

மால்கள் ஹோட்டல்கள், வழிபாட்டு தலங்கள் 8ம் தேதி திறப்பு ; வழிகாட்டுதல் நெறி முறைகளை வெளியிட்டது மத்திய அரசு.!

மால்கள் ஹோட்டல்கள், வழிபாட்டு தலங்கள் 8ம் தேதி திறப்பு ;   வழிகாட்டுதல் நெறி முறைகளை வெளியிட்டது மத்திய அரசு.!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வருகிற 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் UNLOCK1.0 என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது. அதன்படி, ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகளை வருகிற 8ஆம் தேதி முதல் திறந்து கொள்ளலாம் என வழிகாட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி மால்களுக்கு செல்லும் பொதுமக்கள், அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் அனைத்து நுழைவு வாயில்களிலும் வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்:-

*கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும். 

*வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், பொது மக்கள் யாரும் தொடுவதற்கு அனுமதி இல்லை. அன்னதானம் வழங்கும் போது சமூக இடைவெளி விட்டு வழங்க வேண்டும், என்றும், பிரசாதம் விநியோகம் அல்லது புனித நீரைத் தெளித்தல் போன்ற உடல் பிரசாதங்கள் எதுவும் மத இடத்திற்குள் அனுமதிக்கப்படாது எனவும், ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.

*அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ளலாம்.சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.

*வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும்.

*முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும். வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

*வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும். இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

*ஏசி பயன்படுத்துவோர் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருக்க வேண்டும்.

*சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும். கழிவறைகள், கை – கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன

Leave your comments here...