காட்மேன் இயக்குனருக்கு எச்சரிக்கை – 2வது முறையாக மத்திய குற்றப் பிரிவினர் சம்மன்.!

தமிழகம்

காட்மேன் இயக்குனருக்கு எச்சரிக்கை – 2வது முறையாக மத்திய குற்றப் பிரிவினர் சம்மன்.!

காட்மேன் இயக்குனருக்கு எச்சரிக்கை –  2வது முறையாக மத்திய குற்றப் பிரிவினர் சம்மன்.!

Godman பெயரில் திரு.பாபு யோகேஸ்வரன்இயக்கத்தில், திரு இளங்கோ தயாரிப்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் zee5 என்பதில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள டீசர் பட காட்சிகளில் இந்து சாமியார்களை அவமானப்படுத்தும் வகையிலும், இந்துசமய சின்னங்களான காவி உடை, ஓம் உள்ளிட்டவற்றை அவமானப்படுத்தும் வகையிலும், மது அருந்துவது போன்றும் ஆபாசமாகவும் வன்முறையாகவும் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட சாதியை சொல்லி அவமானப்படுத்தும் வகையிலும் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிராமண சமூகத்தை இழிவுப்படுத்திய காட்மேன் படக்குழு மற்றும் ஜீ5 தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்து. மேலும் சில இடங்களில் இந்த வெப்சீரிஸ் குழு மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பலரும் சமூகவலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசரை சம்பந்தப்பட்ட ஜீ 5 நிறுவனம் யு-டியூப்பில் இருந்து நீக்கிவிட்டது. அதற்கு பதிலாக மற்றுமாரு புதிய டீசரை (மே 29) வெளியிட்டனர். பிறகு அதையும் நீக்கிவிட்டனர்.இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.காட்மேன் இணைய தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மதத்தினரை அவதூறாக சித்தரிப்பதாக அளித்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவினர் இந்த தொடரின் இயக்குனர் பாபு மற்றும் தயாரிப்பாளர் இளங்கோ ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேற்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது அவர்கள் இருவரும் ஆஜராகாததால் வரும் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகும்படி இரண்டாவது சம்மனை மத்திய குற்றப் பிரிவினர் இருவருக்கும் அனுப்பியுள்ளனர் ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...