கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர்க்கு ரூ.1000 உதவித்தொகை – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

தமிழகம்

கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர்க்கு ரூ.1000 உதவித்தொகை – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர்க்கு  ரூ.1000 உதவித்தொகை – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத சம்பளமில்லாமல் தட்டு காசு மட்டுமே பெற்று பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணிபுரிபவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/பூசாரிகளுக்கு, ஒருகால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கும், திருக்கோயில்களில் ஊதியமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியும் நாவிதர், பண்டாரம் / பண்டாரி, மாலைக்கட்டி, பரிச்சாரகர்/சுயம்பாகம், வில்வம், காது குத்துபவர்/ ஆசாரி, நாமவளி, மிராசு கணக்கு, கங்காணி திருவிளக்கு, முறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர், தாசநம்பி போன்ற பணியாளர்களுக்கு ஏற்கனவே சிறப்பு நேர்வாக ரூ.1,000/- ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டு விட்டது.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு மேலும் ரூபாய் 1,000/- ரொக்க நிவாரணத் தொகையாக திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும்.

Leave your comments here...