கொரோனா சிகிச்சை மருந்து : அமெரிக்காவிற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை…!

இந்தியா

கொரோனா சிகிச்சை மருந்து : அமெரிக்காவிற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை…!

கொரோனா சிகிச்சை மருந்து : அமெரிக்காவிற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை…!

கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும், கொரோனா சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மார்ச் 25 ஆம் தேதி தடை விதித்தது. எனினும், மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், கொரோனா சிகிச்சைக்காக ஹை ட்ராக்சிக்ளோரோகுயினை இந்தியாவிடம் அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. இந்தியா இந்த மருந்தினை அதிகம் உற்பத்தி செய்கிறது. தற்போது அந்த மருந்தினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்காவுக்கு தேவையான மருந்தினை இந்தியா வழங்கினால் உதவியாக இருக்கும்’ என்றார்.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறும் போது, “ இந்தியப் பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை காலை தொலைப்பேசியில் பேசினேன். இரு நாடுகளும் கொரோனா வைரஸை ஒழிப்பதில் ஒற்றுமையுடன் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம். கொரோனா வைரைசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர் காக்கும் மாத்திரையாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இருக்கிறது. இந்த மாத்திரைகளை அமெரிக்க மிக அதிக அளவில் இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது. ஆனால், இந்தியாவில் அந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளதால், அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆதலால், அந்த தடையை எங்களுக்காக தளர்த்தி மாத்திரைகள்கிடைக்க உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தேன். பிரதமர் மோடியும் தீவிரமாகப் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்” என்றார்.


இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனா போராட்டத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு துணை நிற்கும். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அமெரிக்கர்கள் கொரோனாவிலிருந்து மீள பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்இதனிடையே அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் போம்பியோ, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கொரோனா போராட்டத்தில் இரு நாடுகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை தெரிவித்தார்.

Leave your comments here...