பிரதமர் மோடி துவங்கி வைத்த தேஜஸ் ரயில் சேவை ஒராண்டு நிறைவு- 5.7 லட்சம் பேர் பயணம்- மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு..!!

தமிழகம்

பிரதமர் மோடி துவங்கி வைத்த தேஜஸ் ரயில் சேவை ஒராண்டு நிறைவு- 5.7 லட்சம் பேர் பயணம்- மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு..!!

பிரதமர் மோடி துவங்கி வைத்த தேஜஸ் ரயில் சேவை ஒராண்டு நிறைவு- 5.7 லட்சம் பேர் பயணம்- மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு..!!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் வந்த பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில் மதுரை – சென்னை இடையேயான தேஜஸ் அதிவிரைவு சொகுசு ரயில் சேவையையும் அவா் தொடங்கி வைத்தார். தேஜஸ் அதிவிரைவு சொகுசு ரயிலில் சா்வதேச தரத்திலான 22 சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த ரயில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடையும்.


சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் சொகுசு ரயில் முழுவதும் குளிசாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், ஒரு உயா் வகுப்புப் பெட்டியும், 2 டீசல் ஜெனரேட்டா் பெட்டிகளும் உள்ளன.


ஒவ்வொரு இருக்கையின் பிற்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்இடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும், வெளிப்புறமும் தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தொியாத சிற்றுண்டி மேசைகள் உள்ளன. மேலும், செல்போன் சாா்ஜா் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்இடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன. உயா் வகுப்பு பெட்டியில் 56 பயணிகளும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பயணிகளும் பயணிக்கலாம்.இந்த ரயில் சென்னை, மதுரை இடையே திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் செல்ல முடியும்.சென்னை – மதுரை இடையே இந்த ரயிலில் சோ் காா் பெட்டிகளுக்கான கட்டணம் ரூ.895 என்றும், முதல் வகுப்பு சொகுசுப் பெட்டிக்கு ரூ.1,940 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சென்னை- மதுரை இடையே இயக்கப்படும் அதி விரைவு ரயிலான தேஜஸ் ரயில், தனது முதல் ஆண்டு சேவையை நிறைவு செய்து 2-ஆவது ஆண்டு சேவையை தொடங்கியுள்ள நிலையில், இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி முதல் நிகழாண்டில் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை (309 நாள்களில்) இரு மார்க்கங்களிலும் 5 லட்சத்து 7 ஆயிரத்து 57 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம், ரூ.49 கோடியே 74 லட்சம் வருவாய் ரயில்வே நிர்வாகத்துக்கு கிடைத்துள்ளது. அவசர பயணம் மேற்கொள்வோர், தொழில் சம்பந்தமாக வந்து செல்வோர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் இந்த ரயில் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.

Leave your comments here...