ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் துரைமுருகன்- தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காங்கிரஸ் புகார்

அரசியல்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் துரைமுருகன்- தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காங்கிரஸ் புகார்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் துரைமுருகன்- தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காங்கிரஸ் புகார்

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியை சேர்ந்த சாட்டை முருகன் என்கிற துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர், ராஜீவ்காந்தியின் நினைவு தூண் அருகே டிக்டாக் வீடியோவை எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார்.

இந்த வீடியோ காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் அது சர்ச்சையையும் உண்டாக்கியுள்ளது.


இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ்  ஸ்ரீபெரும்புதூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். துரைமுருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர கைது செய்ய வாய்பு அதிகம் என்கிறீர்கள்.ஏற்கனவே இவர் நம் தமிழர் கட்சிகளின் மேடைகளில் பாரத பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் குறித்து தரக்குறைவாக பேசி வருபவர்.


Leave your comments here...