குழந்தை ஏசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை : பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் ; பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

சமூக நலன்

குழந்தை ஏசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை : பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் ; பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

குழந்தை ஏசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை : பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் ; பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி பெருமாள். இவருடைய 2-வது மகள் பேச்சியம்மாள் (வயது 15). இவர் பாளையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.அரையாண்டு தேர்வில் பேச்சியம்மாள் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக தெரிகிறது. இதை ஆசிரியைகள் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு வந்த பேச்சியம்மாள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார், பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை நடத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் அவர்கள், அந்த பள்ளிக்கூடம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளிக்கூட நிர்வாகத்தை கண்டித்து தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், “அரையாண்டு தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால், பேச்சியம்மாளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேசி உள்ளனர். 1 மணி நேரம் அவர்களை நிற்க வைத்து பேசி, வேறு பள்ளியில் மாணவியை சேர்க்குமாறு கூறி உள்ளனர். அதையும் மீறி பள்ளிக்கு சென்ற மாணவியை தினமும் திட்டி, அடித்து உள்ளனர். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற பேச்சியம்மாள் ஆசிரியைகளால் விரட்டியடிக்கப்பட்டதால், மனம் உடைந்து வீட்டுக்கு வந்து சீருடையுடன் தூக்குப்போட்டு இறந்து விட்டார்.


எனவே, இதற்கு காரணமான ஆசிரியைகள், பள்ளிக்கூட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலீசாரிடம் கூறினர். இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபுவிடம் மனு கொடுத்தனர். அதில் மாணவியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இதையடுத்து போலீசார் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.


Leave your comments here...