குரூப் 4 முறைகேடு- 99 தேர்வர்கள் அதிரடி நீக்கம்..! முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோரை கைது செய்தது போலீஸ்..!

சமூக நலன்

குரூப் 4 முறைகேடு- 99 தேர்வர்கள் அதிரடி நீக்கம்..! முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோரை கைது செய்தது போலீஸ்..!

குரூப் 4 முறைகேடு- 99 தேர்வர்கள் அதிரடி நீக்கம்..!   முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோரை கைது செய்தது போலீஸ்..!

குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது, தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் குறிப்பிட்ட 2 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. முறைகேடு செய்து, கூடுதல் மதிப்பெண் பெற்றதாக 99 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் 39 பேர் 100 இடங்களுக்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வில் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதிநீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 பேருக்கு பதிலாக, தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு மையங்கள் தவிர மற்ற எந்த மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான தேர்வாளர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேடு செய்த 99 தேர்வாளர்கள், இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்பாக குரூப் 4 முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்திலும் தேர்வு அதிகாரிகள் ஆவர். தேர்வர்கள் காப்பி அடிக்கவும், தேர்வு பதில் தாள் மாற்றிய குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.

Leave your comments here...