மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

தமிழகம்

மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

ஹைட்ரோகாா்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் தேவையில்லை என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த  அறிவிப்பு தமிழக விவசாயிகள் மற்றும் அரசிய கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் டெல்டா பகுதி மக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்:- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் துறை அனுமதி மற்றும் மக்களின் கருத்தை கேட்க தேவையில்லை என்ற முடிவை திரும்ப பெற வேண்டும். பெரும்பாலான ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் டெல்டா பகுதியிலே அமைந்துள்ளது.. மேலும் டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் பகுதி. சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்தக் கடிதத்தின் பிரதியானது மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Leave your comments here...