விசேஷ நாட்களில் கோயம்பேட்டில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு..!

தமிழகம்

விசேஷ நாட்களில் கோயம்பேட்டில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு..!

விசேஷ நாட்களில் கோயம்பேட்டில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு..!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் தற்பொழுது இயக்கப்பட்டு வருகிறது.

மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு 24/05/2024 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டும் பரிச்சார்ந்த முறையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் மற்றும் ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...