தமிழர்கள் பிச்சைக்காரர்கள்…லால் சலாம் நடிகை – இது தான் ரஜினி மகள் ஜஸ்வர்யா-வின் தமிழ்நாட்டு மக்கள் மீதுள்ள பாசமா…?

சினிமா துளிகள்

தமிழர்கள் பிச்சைக்காரர்கள்…லால் சலாம் நடிகை – இது தான் ரஜினி மகள் ஜஸ்வர்யா-வின் தமிழ்நாட்டு மக்கள் மீதுள்ள பாசமா…?

தமிழர்கள் பிச்சைக்காரர்கள்…லால் சலாம் நடிகை –  இது தான் ரஜினி மகள் ஜஸ்வர்யா-வின் தமிழ்நாட்டு மக்கள் மீதுள்ள பாசமா…?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பிப்.9ம் தேதி வெளியாகிறது. ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா தயாரித்துள்ளது. இந்நிலையில், லால் சலாம் படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளது குறித்து ஐஸ்வர்யா ரஜினியிடம் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது.  கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்.9 ஆம் தேதி ரிலீஸாகிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம், கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து மத அரசியலை விமர்சிக்கும் கதைக்களம் என சொல்லப்படுகிறது.

இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்னர் லால் சலாம் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய ஐஸ்வர்யா, “என் அப்பா ரஜினிகாந்த் சங்கி இல்லை” என ஆவேசமாக பேசியிருந்தார். எல்லோரும் அவரை சங்கி என சொல்வதை பார்த்து என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ரஜினிகாந்த் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்றெல்லாம் பேசியிருந்தார்.

இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினியிடமும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், லால் சலாம் – நடிகர்களின் பின்னணி: பெயர்: தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

அது இதுதான்: Dear Chennai, you beg for water we give! You beg for electricity, we give! ur people come and occupy our beautiful city and kocha paduthify it, we allow and nw u wr at our mercy to go to playoffs, we let be!! Like this you begging we giving!” தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்…. தருகிறோம்.

இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால்… கடுப்பான இவர் ‘இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்’ என சபதம் போட்டார். (I am withdrawing from the film I have accepted and won’t come back, she said), சரி இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறீர்களா? லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான்.

எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தலீவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா…

இதற்கு என்ன பதில் கூறுவார்? சினிமா ரசிகர்களே… உங்கள் வேலை… இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த கேள்வியும் கேட்காதீர்கள். எஞ்சாய். ஆதாரம்: indiatoday.in/india/south/st

Leave your comments here...