அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் குழந்தைப் பேறு.. கர்ப்பிணிகள் விருப்பம்

இந்தியா

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் குழந்தைப் பேறு.. கர்ப்பிணிகள் விருப்பம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் குழந்தைப் பேறு.. கர்ப்பிணிகள் விருப்பம்

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள கர்ப்பிணிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதே நாளில் (22- ம் தேதி) 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2-ம் வாரத்திற்கு பிறகு பிரசவ தேதி உள்ள 35 பெண்கள், ராமர் கோவில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவமனையில் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 15 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படும் நிலையில், ஜனவரி 22-ம் தேதி 35 கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave your comments here...