அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் – 13வது முறையாக நீட்டிப்பு…!

அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் – 13வது முறையாக நீட்டிப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் – 13வது முறையாக நீட்டிப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13-வது முறையாக வரும் ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave your comments here...