பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளது.. செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியல்தமிழகம்

பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளது.. செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளது.. செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பூந்தமல்லி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழா திருவான்மியூரில் நடந்தது. இதில் மணமக்கள் டாக்டர் ஏ.கே.எஸ்.தாரணி-டாக்டர் எம்.பரத் கவுசிக் ஆகியோரை வாழ்த்தி பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-எமர்ஜென்சியின் போது ஆட்சியைவிட ஜனநாயகத்துக்கே ஆதரவு என கூறியவர் கலைஞர். இந்திராகாந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்கக் கூடாது என்று டெல்லியில் இருந்து தூது வந்தது.உயிரே போனாலும் எமர்ஜென்சியை எதிர்த்து நிற்போம் என்று கருணாநிதி கூறினார். ஆட்சி கலைக்கப்படும் என்ற மிரட்டல்களுக்கு அடிபணியாமல் எமர்ஜென்சியை கலைஞர் எதிர்த்தார்.

‘சிறையை காண அழைக்கிறேன்’ என்று அண்ணா சொல்லுவார். பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரி ஒன்றை கலைஞர் அடிக்கடி சொல்லுவார். ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாற்ற நினைக்கும் சிறைச்சாலை’ என்பதுதான் அந்த கவிதை வரிகள். அந்த சிறைச்சாலையில் கிருஷ்ணசாமியின் தந்தை அடைக்கப்பட்டிருந்தார். அதை பார்த்து தான் கிருஷ்ணசாமி உணர்ச்சியை பெற்று தி.மு.க. மீது பற்றுடன் இருக்கிறார். தந்தை வழியில் கிருஷ்ணசாமி தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 10 வயதிலேயே கிருஷ்ணசாமி தி.மு.க.வில் பற்று கொண்டு அந்த வட்டாரத்தில் பணியாற்றி படிப்படியாக வளர்ந்து, சட்டக் கல்லூரியில் மாணவர் அணியில் பொறுப்பேற்று பணியாற்றினார்.

பின்னர் தி.மு.க. வழக்கறிஞர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு ஆதி திராவிடர் நலக்குழுவில் அவர் பொறுப்பேற்று பணியாற்றினார். மேலும் எம்.பி.யாக 2 முறை சிறப்பாக பணியாற்றினார். இப்போது 2-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.

இன்று நாட்டில் இருக்கும் நிலைமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது.எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கும் பா.ஜனதா ஆட்சி தனக்கு எதிராக யார் எந்த கருத்தைச் சொன்னாலும் அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது, அதற்காக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்போது செல்போனில் பேசுவதை பதிவுசெய்யும் முறையைக் கையாளுகிறார்கள். ஒரு பெரிய தனியார் செல்போன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே எச்சரித்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்களுக்கெல்லாம் அவர்களே கடிதம் எழுதி சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இப்படி ஒரு செய்தி வந்தவுடன் மத்திய அமைச்சர் ஒருவர், இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்.செய்வதையும் செய்து விட்டு, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு செய்தியை வெளியிடுகிறார் என்று சொன்னால் அந்த அளவுக்கு நாட்டிலே இன்றைக்கு ஒரு கொடுமையை சந்திக்கக் கூடிய நிலையில் நாம் இன்று தவித்துக் கொண்டு இருக்கிறோம்.

பா.ஜனதாவை பொறுத்தவரை தோல்வி பயம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணி, அவர்கள் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது. மக்களிடம் போய் மோடி ஆட்சியின், கொடுமைகள், அக்கிரமங்கள், அநியாயங்களை, அவலநிலைகளை இன்று நாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.விரைவில் 5 மாநில தேர்தல்கள் வர இருக்கிறது. 5 மாநிலத்திலும் பா.ஜனதா தோல்வியை தழுவப்போகிறது என்ற செய்திதான் நமக்கு வந்து கொண்டு இருக்கிறது.எனவே அவர்களுக்கு இன்று பயம் வந்துவிட்டது.

அந்த பயத்தின் காரணமாக இன்றைக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் முறியடித்து நாட்டிற்கு ஒரு நல்ல விமோசனத்தை உருவாக்கி தருவதற்கு, இந்தியாவை காப்பாற்றுவதற்கு இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அத்தனை பேரும் வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...