கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் – டெண்டர் கோரிய தெற்கு ரயில்வே..!

தமிழகம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் – டெண்டர் கோரிய தெற்கு ரயில்வே..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் – டெண்டர் கோரிய தெற்கு ரயில்வே..!

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே 20 கோடியில் புதிய ரயில்நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ள

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பேருந்து சேவை அளிக்கும் வகையில் தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. புதிய ரெயில் நிலையம், நடைமேடைகள் தொடர்பான நிரந்தர பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இது 3 நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையமாக அமையவுள்ள நிலையில், இதனை ஓராண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave your comments here...