அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு ..!

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு ..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு ..!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தான், ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

அதன் படி ஜாமீன் மனு மீதான் விசாரணை செப். 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி  ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டார்.

இதன்படி செப்டம்பர் 20ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.  இவ்வழக்கில் தீர்ப்பளித்த சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், எதன் அடிப்படையில் அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் தீர்ப்பு நகல் பதிவேற்றம் செய்யப்படும் போது முழுமையாக வெளிவரும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.  புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 7வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...