பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமி – சதுரகிரி கோயிலில் பக்தர்கள் வழிபட 4 நாட்களுக்கு அனுமதி!

ஆன்மிகம்

பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமி – சதுரகிரி கோயிலில் பக்தர்கள் வழிபட 4 நாட்களுக்கு அனுமதி!

பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமி – சதுரகிரி கோயிலில் பக்தர்கள் வழிபட 4 நாட்களுக்கு அனுமதி!

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே போல் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27-ம் தேதி பிரதோஷம், 29-ம் தேதி பௌர்ணமி என்பதால் இரு தினங்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சதுரகிரிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...